#BREAKING : ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க மறுப்பு – உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து. 

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ஆணையத்தில் வேறு நீதிபதிகளை தற்போது சேர்த்தால், அது ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்  என்றும், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.