மெரினா கடற்கரையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா.? திருமாவளவனுக்கு, காயத்ரி ரகுராம் சவால்..!

இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்நிலையில் சவால் தொடர்பாக மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராம்.
அதில் இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறேன் இந்த நிமிடம் வரை அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை இதனால் விடுதலை கட்சி தொண்டர்களை ஏமாற்றும் விதமாக ஆகிவிட்டது. இதற்கு அடுத்து எந்தவொரு எம்பியும், அல்லது தலைவரோ சாதி, மதம் சார்த்த பாகுபாடுகளை பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுருந்தார்.
உண்மையான தலைவர் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் தான் பார்ப்பார்கள் என எதிர்பாக்கிறேன். பின்னர் அனைவரும் உங்களின் வழக்கமான பணியைத் தொடருமாறு பதிவிட்டுருந்தார்.
மேலும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்