#IPL2022: டாஸ் வென்ற பெங்களூர்.. ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸிஸ், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாப் டு பிளெஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வானிது ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.