ஆர்சிபி(RCB) தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்வதை நான் பார்க்க வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக ஐபிஎல் இல் அதிரடி ஆட்டக்காரர்களில் முக்கிய வீரராகக் கருதப்படும் கிறிஸ் கெய்ல், தனது முன்னாள் அணியான RCB, ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும், அதை நான் பார்க்கவேண்டும்.
RCB தான் எப்போதும் என்னுடைய அணி என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட RCB அணி, கோப்பையை வென்றது கிடையாது. மேலும் கூறிய கிறிஸ் கெய்ல், நாங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும் என்று போராடினோம் ஆனால் அது நடைபெறவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த அணி என்றால் அது RCB தான், நான் RCB அணியில் விளையாடியது குறித்து பெருமையாக உணர்கிறேன் என்று கெய்ல் கூறியுள்ளார். கிறிஸ் கெய்ல், RCB அணிக்காக 2013 முதல் 2017 வரை 84 போட்டிகளில் விளையாடி 3163 ரன்கள் குவித்திருக்கிறார்.