பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியீடு – அமைச்சர் அன்பழகன்

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1, 60, 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் , அதில் 1 ,31, 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பம் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவ மாணவிகளுக்கான ரேண்டம் எண்ணை நேற்று உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.