“நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”- காரைக்கால் மாவட்ட ஆட்சியர்!

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

அதன்படி பேருந்து முன்பதிவுக்கு 04368-228801, 227704 என்ற தொலைபேசி எண்களை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம் தொடர்பு கொள்ளாலம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நேற்று ஹால் டிக்கெட் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.