நியூசிலாந்தில் கடந்த ஆண்டு இரண்டு மசூதியில் தாக்குதல் நடத்தி 51 பேரை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளை குறிவைத்து மர்ம நபர் துப்பாக்கியால் நடத்தப்பட்ட தாக்குதலில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை தொடர்ந்து மறுத்து வந்த பிரென்டன் சமீபத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், நியூசிலாந்தில் மசூதியில் புகுந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பிரென்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தண்டனை காலத்தில் பரோல் வழங்கப்படாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.