இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தில் முதன் முதலாக பறந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்து உள்ளார்.

இந்த தேஜஸ் ( Light Combat Aircraft -LCA) போர் விமானமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் லிமிடெட் நிறுவனம் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தாயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த விமானமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற  ஏரோ இந்தியா ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த தேஜஸ் விமானம் இந்திய தொழில்நுட்பத்துடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2,205 கிமீ வேகத்தில் இந்த விமானம் பறக்கும் வல்லமை கொண்டது. இதில் இரு இருக்கைகள் மட்டுமே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, HAL விமான நிலையத்தில் இருந்து பயணித்து சோதனை செய்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.