சிம்புவை வைத்து சூப்பரா பண்ணுங்க! இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படமான ‘STR48’ படத்திற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிகாகத்தான் இயக்குனர் தேசிங் பெரியசாமி எழுதினார். இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், ரஜினி அவரை நேரில் அழைத்து படத்தை பார்த்துவிட்டு பாராட்டியும் இருந்தார். பாராட்டிய பிறகு தனக்கு எதாவது கதை இருக்குமா என்பது போல கேட்க அதற்கு தேசிங் பெரியசாமி ஒரு கதையை கூறினாராம்.

அந்த கதையும் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே பேச்சுவார்தையிலே நின்றுவிட்டது. பிறகு அந்த கதையை சிம்பவுக்கு ஏற்றபடி சற்று மாற்றம் செய்து அதனை சிம்புவிடம் கூறி அவரை படத்தில் நடிக்க சம்மதம் வாங்கிக்கொண்டார். சிம்புவுக்கும் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்த காரணத்தால் படமும் உறுதியாக படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

பர்ஸ்ட் லவ்-ஐ விட அதுதான் இனிமையானது…வெக்கப்பட்ட அசோக் செல்வன்.!

இதற்கிடையில், தேசிங் பெரியசாமி நன்றாக படத்தை பண்ணவேண்டும் என்று அவருக்கு ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாராம். அவருக்கு கால் செய்து ஆல் தி பெஸ்ட், நல்லா பண்ணுங்க, சூப்பர் ஆ பண்ணுங்க என்று கூறினாராம். இந்த தகவலை நெகிழ்ச்சியுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.

மேலும், சிம்பு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். படத்தின் கதையை கேட்டவுடன் கதையை எந்த மாற்றமும் செய்யவேண்டாம் இதே கதையாவே படமாக எடுங்கள் என்று கூறியதாகவும்  தேசிங் பெரியசாமி கூறியுள்ளார். STR48 படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.