கத்ரினா கைஃப் கன்னங்கள் போல ரோடு பளபளவென இருக்கவேண்டும்.! அமைச்சர் சர்ச்சை பேச்சு.!

ராஜஸ்தான் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, அதிகாரிகளிடம் இனி அமைக்கப்படும் சாலைகள் கத்ரினா கைப் கன்னங்கள் போல பளபளவென இருக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியில் இருக்கிறார். இவரது தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ராஜேந்திர சிங் குதா என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தனது தொகுதிக்கு சென்ற அமைச்சர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள், தொகுதியில் உள்ள சாலைகள் மோசமாக இருப்பதாக கூறினர்.

உடனே, அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, விரைவில் இந்த பகுதியில் சாலைகள் போட வேண்டும். அந்த சாலைகள் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் கன்னங்கள் போல இருக்க வேண்டும் என கூறினார். அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.