தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம்!

ராமேஸ்வரம் கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  குடும்பத்தினருடன் வழிபட்டார். ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆளுநரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து கோவிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பிருந்தாவன் சாது விஜய்கோஷல் மஹாராஜ் ஆகியோர் சென்னையிலிருந்து சேதுவிரைவு ரயிலில் புறப்படடு ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.

ராமநாதபுரம்,திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் ஆளுனரின் வருகையொட்டி  இருந்து 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment