புல்வாமா தாக்குதல்:சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

சிவச்சந்திரன் உடலுக்கு குடும்பத்துனர், கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதன்பின்னர் திருச்சி விமான நிலையத்தில்  சிவசந்திரனின் உடலுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அதேபோல் சிவசந்திரனின் உடலுக்கு, தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள்.இந்நிலையில் சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு கொண்டுவரப்பட்டது.சிவச்சந்திரன் உடலுக்கு குடும்பத்துனர், கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Comment