சகபயணிகளின் புன்னகைக்கு பாதுகாப்பளியுங்கள் – விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமிழக காவல்துறை

சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  தமிழக காவல்துறை வாகனம் ஓட்டும் செல்போனை தவிர்க்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்டு, ‘வாகனம் ஓட்டும் போது செல்போனை தவிர்க்கவும் சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின் கனவுகளை¸ நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும். கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி சாலையில் செலுத்துங்கள். சகபயணிகளின் புன்னகைக்கு பாதுகாப்பளியுங்கள்.’ என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.