விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்திய விமானப் படை.1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதிவிமானப்படை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்திய விமான படையின்  87வது தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த நிலையில் விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,இன்று இந்திய விமானப்படை தினம்  கொண்டாடப்படும் நிலையில்,  இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நமது பெருமைமிகு தேசம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும், சிறப்புடனும் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவை ஆற்றும் என்று தெரிவித்துள்ளார்.