கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனை.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை ஈடுபட உள்ளார். பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கொரனோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக பல மாநிலங்களில் கூறி வரும் நிலையில் இந்த ஆலோசனையில் நடைபெற உள்ளது.