#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. இரவு 8 மணிக்கு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் இன்று இரவு 8 மணிக்கு அவசரகால ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் பல்வேறு அமைச்சகங்களின் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக பல மாநிலங்கள் கூறிவரும் நிலையில், இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது.