391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி அவர்களின் 391 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி பதிவு ஒன்றையும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

அதில், மா பாரதியின் அழியாத மகன் சத்ரபதி சிவாஜி மகாராஜ்ஜின் பிறந்தநாளில் இன்று நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது அசாத்திய தைரியமும், அற்புதமான வீரமும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் தலைமுறைதோறும் மக்களை தொடர்ந்து வந்து ஊக்குவிக்கும் என புகழாரம் சூட்டி பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal