அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது – கே.எஸ்.அழகிரி

அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது என்று தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி   தெரிவித்துள்ளார்.
தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பணம் பலத்தால் வெற்றி பெற்றுள்ளது.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது.
இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல.  2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது என்று  கே எஸ் அழகிரி  தெரிவித்துள்ளார்.