விடுதலை கோரும் நளினி வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும், உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டியிருந்தாலும் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் ஆளுநருக்கு அனுப்பக்கூடாது எனவும் நளினி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தீர்ப்பை தள்ளிவைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment