#BREAKING: வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!

வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதிப்பு.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள அனுமன் கோயில், கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது. இந்த நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment