தபால் வாக்கு – திமுகவின் அவசர வழக்கு நாளை விசாரணை.!

தேர்தல் ஆணையம் நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனிகளும் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தபால் மூலம் வாக்களிப்போரின் பட்டியலை தொகுதிவாரியாக வழங்கக்கோரி திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கு சம்மந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், இன்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திமுகவின் அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்