போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் இந்தியா வருகை.! மூன்றாவது முறையாக சந்திப்பு.!

  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு  இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது.
  • 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார் போர்ச்சுகல் நாட்டின் பிரதமர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த வருடம்  கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு  இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குடியரசு தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று போர்ச்சுகல்லின்  பிரதமர் அண்டோனியோ கோஸ்டா 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆண்டோனியோ காஸ்ட மத்திய சிறப்பு குழு  இரண்டாம் கட்ட சந்திப்பில்   கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதன் பின் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையில்  நடைபெறும் 3 வது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் போச்சுகல் இடையே உள்ள  வர்த்தகம், ராணுவ பாதுகாப்பு, அறிவியல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan