தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு..!

தஞ்சை மேற்கு காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை சோழர் சிலையில் இருந்து மாட்டு வண்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்களுடன் அண்ணா சிலை வரை பேரணியாகப் சென்றுள்ளார்.பின் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தஞ்சை மேற்கு காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தின் போது அனுமதியின்றி மாட்டுவண்டி ஒட்டி சென்றது, கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூடியது உள்ளிட்ட  புகாரின் பேரின் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, போன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.