மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை, மூன்று நாட்கள் பயணமாக தாயலாந்து செல்லவுள்ளார். அங்கு சென்று பல்வேறு மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் நவ.2ம் தேதி முதல் நாள் மிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவுள்ளார். மேலும் குருநானக்கின் 550-வைத்து பிறந்தநாளை முன்னிட்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும், பிரதமர் நரேந்திரமோடி, திருக்குறளின் தாயமொழிபெயர்ப்பை வெளியிட உள்ளார். பின் தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்கிறார். இந்த மூன்று நாட்களும் பல மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நவ.4-ம் தேதி டெல்லி திரும்புகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.