2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திட்டம் -உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நேற்று  திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதன் பின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செப்டம்பர் 14 முதல்  நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடத்தப்படும் . 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது .தொகுதிக்கு 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு புதிய மொபைல் ஆப் உருவாக்கப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திமுகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.