மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா., விரைவில் அறிவிக்கப்படும் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா., விரைவில் அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளன. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதனிடையே, சென்னையில் செய்தியளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்