திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்..சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது  சிபிஐ நீதிமன்றம்.இந்த நிலையில் சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.