பாலூட்டிய குழந்தைக்கு வந்த பரிதாப நிலை…!!!

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்-செலஸ்டின் தம்பதியினர். இவருக்கு முதலாவதாக ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 18 நாட்களே ஆகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைக்கு பாலூட்டிய செலஸ்டின், பாலூட்டியதும் குழந்தையை தொட்டிலில் போட்டுள்ளார். இக்குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஸ்டாண்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment