அப்பவே சொன்னோன்-யாரு கேட்ட..கிண்டல் செஞ்சிங்க..இப்ப பாருங்க-சீறிய சிதம்பரம்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று  நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்தனர்’ என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா சிதம்பரம் நாடு முழுவதையும், 2 -4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கைகள் தான் கொரோனா பாதிப்பை தடுக்கும் என்றும் மேலும்  அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை வரவேற்று  பதிவிட்டுள்ளார்.அதில் என் போன்றோரின் யோசனையை ஏற்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த, தமிழ்நாடு உட்பட்ட மாநில அரசுகளுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி. இந்த முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மிக முக்கியமாகப் பெரிய கிராமங்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இவற்றை கடுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டினாலும் தமிழக அரசு துணிவுடன் செயல்படவேண்டும். என்று அவர் பதிவிட்டுள்ளார்.

author avatar
kavitha