பாஜக 3 தொகுதிகளில் வெற்றி! ஆர்.கே. நகருடன் சேர்த்து 5 தொகுதி இடைத்தேர்தல்….

ஆர்.கே.நகருடன் சேர்த்து, 4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் சிக்கந்த்ரா ((Sikandra)) தொகுதியிலும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் லிக்காபலி ((Likabali)) மற்றும் பக்கெ – கேசாங் ((Pakke-Kessang)) தொகுதிகளிலும் ஆளும் கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதேபோன்று மேற்கு வங்க மாநிலம் சபாங் ((Sabang)) தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில், அந்தந்த மாநிலங்களின் ஆளும் கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார்…

source: dinasuvadu.com

Leave a Comment