“எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் – கமல்ஹாசன் ட்வீட்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தலில் பணம் புழங்க கூடாது என்று பல்வேறு இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் சில இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பல பணங்கள் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் வாக்காளர்கள் பணம் வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்கி தங்கள் உரிமைகளை விற்காதீர்கள் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம், ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்றும் நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்