பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கிய ஓபிஎஸ் – இபிஎஸ்

கோவையில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்