வெஸ்ட் இண்டீஸ் எதிராக 4வதாக களமிறங்கி சதம் அடித்த ஒரே இந்திய வீரர்…!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர்.

இந்த மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது. அஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்று இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக படைத்த சாதனையை தற்போதுவரை எவராலும் முறியடிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் தனது ஓய்வை அறித்த யுவராஜ் சிங் 2009ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஓடிஐ தொடரில் 4வதாக களமிறங்கிய சதம் (131) அடித்து சாதனை படைத்துள்ளார். எனவே, தற்போது நடக்கவுள்ள தொடர்களில் இந்திய அணி வீரர்கள் இந்த சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Vidhusan