யாக்கர் கிங் லசித் மலிங்கா ஓய்வு அறிவிப்பு ! – திமுத் கருணரத்னே.

இலங்கை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யாக்கர் மன்னன் லசித் மலிங்கா நடந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 26 தேதி நடைபெறவுள்ளது. இதில் லசித் மலிங்கா விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற லசித் மலிங்கா வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்னே கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

 

author avatar
Vidhusan