மாணவர்களே…இன்று முதல் ஆன்லைன் பதிவு;ஜூலை 29 தான் கடைசி தேதி – அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு.

தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

எனவே,சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள்  tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்,ஆன்லைன் பதிவு தொடர்பான விபரங்களுக்கு இங்கே  http://www.tndalu.ac.in/pdf/2022/july/Notification_for_5_Years_Integrated_Law_Courses2021-2022.pdf பார்வையிடவும்.

Leave a Comment