சென்னை வந்தடைந்தார் ஓபிஸ்…!

டெல்லி பயணம் மேற்கொண்ட ஓபிஎஸ் தற்போது சென்னை திரும்பினார். 

கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் கடந்த 24-ஆம் தேதி டெல்லி விரைந்தனர்.

அங்கு, டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்போர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால், டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் தனது டெல்லி பயணத்தை முடித்து, இன்று சென்னை திரும்பியுள்ளார்.அவருக்கு தொடர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment