புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து…

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுகவின் சார்பாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.