தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில்,தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு, அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும்  என்று கூறினார்.

அந்த பள்ளிகளின் ஆசிரியர்களே நூலகத்தில் நூலக ஆசிரியர்களாக பணிபுரிவார்கள் .மேலும் இதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.