சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை – உத்தவ் தாக்கரே..!!

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு உள்ளதாக கூறினார்.

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புவதாகவும், அரசியல் பயணத்தில் மோடி அலையைப்போல் எத்தனையோ அலைகளை சிவசேனா சந்தித்து விட்டதாக கூறிய அவர், ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் காலத்து ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் நாங்களல்ல என்றும், அப்படி செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே நாங்களும் தேர்தலின் போது ராமர் கோவில் பிரச்சனையை எழுப்புவதாக உத்தவ் தாக்ரே தெரிவித்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment