இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை – ஜோதிமணி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அக்.7-ம் தேதி, ஜனநாயக ரீதியாக, அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் நிறைவு பெற்று, 20-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதற்கு அரசியல் பிரபாலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம்.ஆனால் ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.