அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி ! எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங் பேச்சு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக நவம்பர் 30 -ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஜார்கண்டில் உள்ள பிஸ்ராம்பூர் தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுங்கியில்,அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.குறிப்பாக்கை இதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.