” யாரையும் சந்திக்கவில்லை ” G.K வாசன் கருத்து…!!

தாமாக தலைவர் G.K வாசன் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ்_வை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

யாரையும் சந்திக்கவில்லை என்று G.K வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார் .

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா_வுடன் துணை முதல்வரும் , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செலவம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K வாசன் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரை சந்தித்துள்ளார்.இதில் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்கனவே அதிமுகவுடன் தாமாக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment