இவர் ஆற்றிய பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாதது – சசிகலா

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கோவிந்தராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவரது மறைவுக்கு சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

அன்புசகோதரர் திரு.துரை கோவிந்தராஜன் அவர்கள் கழகத்தின் மீதும்,நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும்,என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர். கழக தொண்டர்களை அன்போடு அரவணைத்து செல்லக்கூடியவர். கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாதது.

திரு. துரை கோவிந்தராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment