திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். மேலும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய அவர்,  தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.