இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் அலுவலகம் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை!

சென்னை மண்ணடில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவரான சையது முகம்மது புகாரி வீடு புரசைவாக்கத்தில் உள்ளது. அங்கும் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் 2 இடங்களை தவிர்த்து மேலும் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.