சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கட்டண சலுகை….இலங்கை அரசின் புதிய சேவை…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இலங்கையில் இருந்து வரும் பக்தர்களுக்கு  விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு, கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டின் மட்டக்களப்பு மற்றும் மாதுலா பகுதியில் இருந்து சபரிமலைக்கு வர வேண்டுமென்றால் விமானத்தின் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு 40க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் வந்தனர். மதுரை வந்த ஐயப்ப பக்தர்கள் அங்கிருந்து சபரிமலைக்கு கார் மூலமாக செல்கின்றனர்.இந்நிலையில் இலங்கையில் இருந்து  ஐயப்பன் கோவிலில் வழிபாட்டிற்க்காக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புனித பயணம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் போக்குவரத்து கட்டணத்தை சலுகை அடிப்படையில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஐயப்பன் கோவில் சென்று வர இலங்கை அரசாங்கமே கப்பல் மற்றும் விமான சேவையை செய்ய இருப்பதாக சொல்லப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment