புதியக்கல்வி கொள்கை – மொழியை திணிப்பது தான் தவறு, கற்பது அல்ல – சரத்குமார்!

மொழியை கற்பது தவறு அல்ல திணிப்பது தான் தவறு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே புதிய கல்விக் கொள்கைக்கு பலராலும் எதிர்ப்பு வரும் நிலையில் இது குறித்து பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய கல்விக் கொள்கையில் கூடுதல் மொழியை கற்றுக்கொள்ள வலியுறுத்தலாமே தவிர திணிக்கக் கூடாது அது தான் தவறு எனக் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீர் தேர்வு அவசியமில்லை என முதல்வர் முடிவு எடுக்க வேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

author avatar
Rebekal