புதிய காங்கிரஸ் தலைவர் யார் ?இன்று இரவு வெளியாகிறது அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக  முடிவு செய்தார்.ராஜினாமா தொடர்பாக கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் ராகுல்.மேலும்  நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும்  தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று  ராகுல் காந்தி தெரிவித்தார்.

இன்று  டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் .கூட்டத்தில் சோனியா காந்தி,ராகுல் காந்தி ,வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆனால் கூட்டத்தின் பாதியிலே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வெளியேறினார்கள்.இதன் பின்பு சோனியா மற்றும் ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் இருவரும் பங்கேற்க மாட்டோம்  என்று தெரிவித்தனர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது .இன்று இரவு 9 மணிக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.