படங்கள் எல்லாம் தொடர் தோல்வி! வெற்றிப்பாதைக்கு திரும்ப நயன்தாரா எடுத்த முடிவு!

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது என்றாலே அவர்களே தாங்கள் நடிக்கும் படங்களை தயாரிக்க தயாராகி விடுவார்கள். இருப்பினும் இப்போது நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குறைய வாய்ப்பில்லை. ஆனால், சமீபகாலமாக நயன்தாரா நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றிபெறாமல் தோல்வி அடைந்து வருகிறது.

ஒரு காலத்தில் இவருடைய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டிருந்த சமயம் எல்லாம் போய் தற்போது படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் வெற்றியைத் தேடும் முயற்சியில் சொந்தப் படம் தயாரிக்கத் தயாராகி வருகிறார்.

தேதி எல்லாம் இல்ல! சிவகார்த்திகேயன் படத்தை உதறி தள்ளிய மிருணாள் தாக்கூர்!

இவர் சமீபத்தில் ஜெயம்ரவியுடன் நடித்த இறைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து வெளியான அன்னபூரணி திரைப்படமும் ஏமாற்றத்தைத் தந்தது. தற்போது மாதவன், சித்தார்த் ஜோடியாக டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக வெற்றி பாதைக்கு திரும்ப அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். நயன்தாரா  தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனம் ஏற்கனவே பல படங்களை தயாரித்து பல படங்களை விநியோகம் செய்துள்ளது.

இதனையடுத்து சமீபகாலமாக தான் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து இருப்பதால் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தை தேர்வு செய்து அந்த படத்தை தானே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் வகையில் எடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment