தேதி எல்லாம் இல்ல! சிவகார்த்திகேயன் படத்தை உதறி தள்ளிய மிருணாள் தாக்கூர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் மிருணாள் தாக்கூர் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானவுடன் தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே தற்போது அதிர்ச்சியான தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்உருவாகவுள்ள தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாக்கூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாம்.

பிறகு கதையை எல்லாம் கேட்டுவிட்டு மிருணாள் தாக்கூருக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாம். ஆனால், தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏனென்றால், அவர் அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். எனவே, தேதி பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க முடியாது என்று படக்குழுவிடம் பேசி புரிய வைத்து இருக்கிறாராம்.

லால் சலாம் தந்த குஷி! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால் ?

மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் அடுத்ததாக படக்குழு நடிகை ருக்மணி வசந்திடம் பேசி படத்தில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கி இருக்கிறார்களாம். ருக்மணி வசந்த் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்காதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்போலவே சிம்பு தற்போது நடித்து வரும் அவருடைய 48-வது திரைப்படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாக்கூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த படத்திலாவது அவர் நடிப்பாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment